உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2023-02-27 10:21 GMT   |   Update On 2023-02-28 09:28 GMT
  • செல்வம் (வயது 42) என்பவரை கைது கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்
  • சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் அரசம்பட்டு, ஊராங்காணி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசம் பட்டுகுளம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 42) என்பவரை கைது கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஊராங்காணி கிராமத்தில் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கொளஞ்சி (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News