உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2023-10-17 08:03 GMT   |   Update On 2023-10-17 08:03 GMT
  • பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • சோதனையில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 15 வைத்திருந்தது தெரியவந்தது.

கடலூர்:

பண்ருட்டி உட்கோட்ட கிரைம் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பண்ருட்டி ஆர் எஸ் மணி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 15 வைத்திருந்தது தெரியவந்தது பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் மோகன்ராஜை கைது செய்து அவனிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.அப்போது மாளிகம்பட்டு அம்மன் கோவில் தெரு சேர்ந்த பத்மநாபன் (43), என்பவர் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தார். போலீசார் விரைந்து அவரை கைது செய்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில்அடைத்தனர்

Tags:    

Similar News