உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

Published On 2023-03-10 09:51 GMT   |   Update On 2023-03-10 09:51 GMT
  • லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை,

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது32). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை - விளாங்குறிச்சி ரோட்டில் சேரன்மாநகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வெள்ளலூர் வெள்ளிமலை தோட்டத்தை சேர்ந்தவர் மருதாச்சலம்(70). இவர் சிங்காநல்லூர் - வெள்ளலூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் எதிர்பாராத விதமாக மருதாச்சலம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News