உள்ளூர் செய்திகள்

டேங்கர் லாரி மீது கார் மோதி கேரளா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பலி

Published On 2023-10-11 15:41 IST   |   Update On 2023-10-11 15:41:00 IST
  • சந்தீப், அமான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • உடன் வந்த 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,  

 கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் மண்ணடி கிராமத்தைச் சுரேஷ் மகன் சந்தீப் (வயது26), அதே பகுதியைச் சேர்ந்த அமான் (26), ஜமாலுதீன் மகன் ரியாஸ் (24), அடூரைச் சேர்ந்த மித்துஜிலால்(26), கிருஷ்ணன் சாந்த் (22) ஆகிய 5 பேரும் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு வந்தனர்.

அந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி, போலுப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணகிரி - ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புளியரசிமேடு என்ற பகுதிக்கு இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சந்தீப், அமான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த ரியாஸ், மித்துஜிலால், கிருஷ்ணன் சாந்த் ஆகிய 3பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான சந்தீப், அமான் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News