உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-07-10 10:52 IST   |   Update On 2023-07-10 10:52:00 IST
  • வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் நோய் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் நடசேன் மகள் புவனேஸ்வரி (15). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே புவனேஸ்வரி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கூடலூரை சேர்ந்தவர் இளவரசன் (32). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News