- கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார்.
- ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.
கம்பம்:
கம்பத்தை சேர்ந்தவர் சர்தார் (வயது63). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் குள்ளப்புரத்துக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்ற அவர் மாயமானர்.
அவரது உறவினர்கள் தேடி பார்த்தபோது கம்பம் இ.பி. ஆபீஸ் சாலையில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர் அருகே குள்ளப்பகவுண் டன்பட்டியை சேர்ந்த முத்துமணி (55). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் மன வெறுத்த முத்துமணி விஷ மாத்திைர தின்று மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமணி உயிரிழந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.