தேனி அருகே மது பழக்கத்தால் 2 பேர் தற்கொலை
- தேனி அருகே மது பழக்கத்தால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் அணைப்பட்டி பாரஸ்ட் பங்களா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முருகன் (வயது31). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த காளியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆட்டோ பைனான்ஸ் தொழில் பார்த்து வந்த முருகன் குடி பழக்கத்துக்கு அடிமை யானதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகில் உள்ள செங்குளத்து ப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (57). இவரது மகன் ஆறுமுகத்துக்கு திருமணம் முடிந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனவேதனையில் இருந்த பெருமாள் தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.