உள்ளூர் செய்திகள்
செந்துறை அருகே 10 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது
- திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சோதனையில் 10 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செந்துறை :
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையொட்டி செந்துறை பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த பிரான்மலை- பள்ளபட்டியை சேர்ந்த உதுமான் (31), சூர்யபிரகாஷ் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.