உள்ளூர் செய்திகள்
- இருகுடும்பத்தினர் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
- முனிராஜ் இருவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் மல்லேஷ் ஆகிய இருவரை தகாத வார்த்தையில் பேசி தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பெட்ட கான பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி.
அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 31. இருகுடும்பத்தினர் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினரான முனிராஜ் இருவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் மல்லேஷ் ஆகிய இருவரை தகாத வார்த்தையில் பேசி தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில் உத்தன பள்ளி போலீசார் மணிகண்டன் மற்றும் முனிராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.