உள்ளூர் செய்திகள்
நாட்டு கோழிகளை திருடிய 2 பேர் கைது
- சிசிடிவி காமிராவில் பதிவான 2 திருடர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
- கைதான அவர்களை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாதிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் வீட்டில் 11 நாட்டுகோழிகளை வளர்ந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள 11 நாட்டுகோழிகள் திருடு போனது.
இது குறித்து அவர் பாரூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சிசிடிவி காமிராவில் பதிவான 2 திருடர்களை பிடித்து விசாரணை நடத்திய போது தேவேரஅள்ளி பகுதியை சேர்ந்த பிரதாப்சிங், கிரு ஷ்ணன் (வயது21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.