உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஆடு திருடியதாக 2 பேர் கைது

Published On 2023-08-08 14:26 IST   |   Update On 2023-08-08 14:26:00 IST
  • அருண்பாண்டி புதுப்பட்டி காட்டுப் பகுதியில் கிடை அமைத்து ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார்.
  • அருண் பாண்டிக்குச் சொந்தமான ஆட்டை சந்தையில் விற்பனை செய்வதற்காக 2 பேர் வைத்திருந்தது தெரிய வந்தது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகேயுள்ள கீழக் குத்தப்பாஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி(வயது 26). இவர் புதுப்பட்டி காட்டுப் பகுதியில் கிடை அமைத்து ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த சுமார் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள சினை ஆடு ஒன்று நேற்று முன்தினம் காணவில்லை. காணாமல் போன தனது ஆட்டைத் தேடி அருண்பாண்டி, கடையம் சந்தையில் சென்று பார்த்த போது, 2 பேர் அருண் பாண்டிக்குச் சொந்தமான ஆட்டை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து அருண்குமார் கடையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். கடையம் போலீசார் ஆலங்குளம் போலீசாரைத் தொடர்பு கொண்டு இரு ஆடு திருடர்கள் மற்றும் ஆட்டை ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆலங்குளம் அருகேயுள்ள லெட்சுமியூர் பொன்னுசாமி(58) மற்றும் அருணாசலம்(60) ஆகியோர் என்பதும், ஆட்டைத் திருடி விற்பனைக்குக் கொண்டு சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து,2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News