உள்ளூர் செய்திகள்

செல்போன் திருடிய 2 பேர் கைது

Published On 2023-08-25 10:36 IST   |   Update On 2023-08-25 10:38:00 IST
  • பெட்ரோல் பங்க் ஊழியரிடம் செல்போன் திருட்டு
  • அவர்கள் 2 பேரையும் மங்களமேடு போலீசார் கைது செய்தனர்

அகரம்சீகூர் 

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகேயுள்ள வல்லாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), இவர் கடந்த இரண்டு வருடங்களாக பெட்ரோல் பங்க் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார். அப்போது 2 மர்ம ஆசாமிகள் ராஜ்குமாரின் செல்போனை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை குறித்து மங்களமேடு போலீசில் ராஜ்குமார் தெரிவித்தார். விசாரணையில் அவர்கள் அன்னமங்கலம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (23), செஞ்சேரியை சேர்ந்த வெற்றிவேல் (23) என்பதும், இவர்கள் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மங்களமேடு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News