உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2023-06-17 07:50 GMT   |   Update On 2023-06-17 07:50 GMT
  • போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.
  • வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமர் (வயது 57) என்பவர் அவரது காட்டுகொட்டாயில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். இதேபோன்று அ.பாண்டலம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் (30) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News