உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வடமதுரை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2023-11-03 07:36 GMT   |   Update On 2023-11-03 07:36 GMT
  • கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி (வயது35). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நாகசூர்யா (22) என்பவரும் சந்தேகபப்படும்படியாக நின்றுகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந் தனர். வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தி 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் ஆலோசனையின்படி கைது செய்யப்பட்ட 2 பேரும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர். நாகசூர்யா மீது ஏற்கனவே கஞ்சா விற்றது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News