உள்ளூர் செய்திகள்

கோதுமலை அடிவாரத்தில் ரெயிலில் அடிப்பட்டு 2 மயில்கள் பலி

Published On 2023-02-15 15:21 IST   |   Update On 2023-02-15 15:21:00 IST
  • வாழப்பாடி பகுதியில், தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
  • இரைத்தேடி சென்ற ஒரு ஆண் மற்றும் பெண் மயில்கள், சேலம் - விருத்தாசலம் ரெயில் பாதையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியாகின.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புற வயல்வெளிகளிலும் இரைத்தேடி கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், வாழப்பாடி அருகே கோதுமலை வனப்பகுதியில் இருந்து இரைத்தேடி சென்ற ஒரு ஆண் மற்றும் பெண் மயில்கள், சேலம் - விருத்தாசலம் ரெயில் பாதையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியாகின. இன்று காலை மயில்கள் ரெயில் பாதை அருகே இறந்து கிடந்ததை பார்த்து இப்பகுதி மக்கள் சோகமடைந்தனர். இதுகுறித்து வாழப்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News