உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
தேனி அருகே 2 முதியவர்கள் தற்கொலை
- நோய் கொடுமையால் 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் மணி (55). கடந்த சில நாட்களாக நோய் கொடு மையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் விஷ மருந்து சாப்பிட்டு மயங்கினார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (67). இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விஷம் அருந்தி மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது வேலுச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.