கோப்பு படம்
உத்தமபாளையம் அருகே 2 முதியவர்கள் தற்கொலை
- நோய் கொடுமை மற்றும் தொழில் நஷ்டத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் :
உத்தமபாளையம் அருகே களிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது60). குடும்பத்துடன் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். மது போதைக்கு அடிமையான தால் குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் தொழிலிலும் கவனம் செலுத்த முடிய வில்லை. இதனால் விரக்தி அடைந்த கேசவன் விஷம் குடித்து மயங்கினார்.
அக்கம்பக்கத்தி னர் அவரை உத்தமபாளை யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோம்பை அருகே பண்ணை புரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 83). நோய் கொடுமையால் அவதி பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் மனம் வெறுத்து விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.