உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே 1300 குடும்ப அட்டைகளுக்கு 2½ கிலோ மீன்கள்

Published On 2023-10-14 07:30 GMT   |   Update On 2023-10-14 07:30 GMT
  • பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
  • இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே நெடுமானூரில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது இந்த மீன்கள் வளர்ந்து பெரியதாகி விட்ட நிலையில், மீன்களை பிடித்து கிராம மக்களுக்கு வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் அதன்படி ஏரியில் மீன்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட மீன்களை 1300 குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 2½ கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News