உள்ளூர் செய்திகள்
சிவகங்கையில் காப்பகத்தில் இருந்த 2 சிறுமிகள் தப்பி ஓட்டம்
- சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு குழந்தைகள் காப்பகம் சிவகங்கையில் உள்ளது.
- 2 சிறுமிகளும் நேற்று காலை காப்பகத்தின் பின்புறம் உள்ள சுவரின் மீது ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சிவகங்கை:
சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் கடந்த மார்ச் மாதம் காரைக்குடி போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக 15 வயது சிறுமி ஒருவரையும், தேவகோட்டை போலீசார் 16 வயது சிறுமி ஒருவரையும் கோர்ட்டு அனுமதியுடன் தங்க வைத்திருந்தனர்.
இந்தநிலையில் அந்த 2 சிறுமிகளும் நேற்று காலை காப்பகத்தின் பின்புறம் உள்ள சுவரின் மீது ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மாயமான 2 சிறுமிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.