உள்ளூர் செய்திகள்

நகைகள் திருடியவர்களை படத்தில் காணலாம்.

திருநள்ளாறில் இறந்த மூதாட்டி உடலில் இருந்து நகைகளை திருடிய 2 பேர் கைது

Published On 2022-12-13 07:39 GMT   |   Update On 2022-12-13 07:39 GMT
  • அருமை கண்ணு வயது 90 வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
  • 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது தாயார் அருமை கண்ணு (வயது 90). சம்பவத்தன்று இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்க அன்பழகன் ஏற்பாடு செய்தார். அதன்படி குளிர்சாதன பெட்டியை கொண்டு வந்த, திருநள்ளாறு தென்னங்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (32), அவரது நண்பர் ராஜபாண்டியன் (37) ஆகிய 2 பேர், மூதாட்டியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை திருடியதாக கூறப்படுகிறது.

மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, அன்பழகன் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார், சந்தேகத்தின் பேரில் குளிர்சாதன பெட்டி வைக்க வந்த ரஞ்சித் மற்றும் ராஜபாண்டியை பிடித்து விசாரித்தனர். அப்போது, மூதாட்டி உடலில் இருந்த தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News