உள்ளூர் செய்திகள்

துடியலூர், சூலூரில் கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது

Published On 2023-01-23 09:22 GMT   |   Update On 2023-01-23 09:22 GMT
  • கஞ்சாவை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
  • 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை

கோவை துடியலூர் முல்லை நகரில் உள்ள காட்டு பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கவுண்டம்பாளையம் முல்லை நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ேலாகு என்ற லோகநாதன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சூலூர் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள சந்திப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த விழுப்புரத்தை சேர்ந்த நந்தகுமார் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News