உள்ளூர் செய்திகள்
கோவையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
- கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையம்-கணூவாய் ரோட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து வடவள்ளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த லட்சுமி நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 53), நரசிம் நாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (38) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.