உள்ளூர் செய்திகள்

18-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

Published On 2023-09-07 09:52 GMT   |   Update On 2023-09-07 09:52 GMT
  • தேவர் முக்குளம் கிராமத்தில், வணிகக்குழு கல்வெட்டினை புதிதாய் கண்டு பிடித்துள்ளது.
  • வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர் முக்குளம் கிரா மத்தில், வணிகக்குழு கல் வெட்டினை புதிதாய் கண்டு பிடித்துள்ளது.

இங்குள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோவில் கூரையில் வைத்துக் கட்டப்பட்டிருந்த முதலாம் ராஜேந்திரசோழனின் 18-ம் ஆட்சியாண்டை சேர்ந்த வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் தேவர் முக்குளத்தினரின் சிறந்த வணிக தளமாக இருந்துள்ளது. அங்கு பல்வேறு வணிக குழுக்கள் இருந்து, அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு என வீரர்படைகளை வைத்து உள்ளனர். மேலும் அந்த வீரர்கள் தங்குவதற்கு என வீரப்பட்ட ணம் இங்கு இருந்ததை இந்த கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுப்பணியில் பிரகாஷ், தலைவர் நாராயண மூர்த்தி, சதானந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, தேவர் முக்குளம் சிங்காரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News