உள்ளூர் செய்திகள்
ரூ.1.85 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை
- சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
- மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் படைவீரர்களிடமிருந்து 16 மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி உத்தரவிட்டார்.
மேலும், முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர், முன்னாள் படைவீரர்கள் தொகுப்பு