1.60 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை
- மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதார த்துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன.
- ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரத்து 698 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.
ஈரோடு, ஜூலை. 28-
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டது.முதலில் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
மாணவ-மாணவிகளுக்கு
அதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கத்தால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. எனவே தடுப்பு நடவடிக்கையாக முதலில் 15 முதல் 18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி முகாம்
மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதார த்துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன. இதேபோல் முன்கள பணியா ளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வருகிறது.
தற்போது 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாதங்களுக்கு மேல் கடந்த வர்களுக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலும் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடிக்கி விடப்பட்டு ள்ளது. ஈரோடு மாவட்டத்தின் மொத்தம் மக்கள் தொகை 23,77,315 ஆகும்.
இதில் 18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 48 ஆயிரத்து 402 பேர் போட்டு உள்ளனர். இது 91 சதவீதம் ஆகும்.
இதே போல் 14 லட்சத்து 57 ஆயிரத்து 436 பேர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 80 சதவீதம் ஆகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரத்து 698 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.
இதைப்போல் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 89 ஆயிரத்து 73 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இது 85 சதவீதமாகும். இதேபோல் 2-ம் தவணை தடுப்பூசியை 80,856 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 77 சதவீதம் ஆகும்.
இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதில் இதுவரை 55 ஆயிரத்து 27 பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 83 சதவீதமாகும்.
இதேப்போல் 45 ஆயிரத்து 975 பேர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 69 சதவீதம் ஆகும். தற்போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.