உள்ளூர் செய்திகள்
- சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக மண், மரம் கடத்துவதாக புகார் எழுந்தது.
- அப்போது அனுமதியின்றி நடத்திய 12 செங்கல் சூளைகளுக்கு தாசில்தார் வெங்கடேசன் ‘நோட்டீஸ்’ வழங்கினார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக மண், மரம் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கெங்கவல்லி தாசில்தார் வெங் கடேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் கெங்கவல்லி, கடம்பூர், தெடாவூர், ஆணையாம்பட்டி, நடுவலுார், மண்மலை, தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதியின்றி நடத்திய 12 செங்கல் சூளைகளுக்கு தாசில்தார் வெங்கடேசன் 'நோட்டீஸ்' வழங்கினார்.