உள்ளூர் செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, காரைக்கால் 12 மீனவர்கள் அதிரடி கைது

Published On 2022-09-07 08:20 GMT   |   Update On 2022-09-07 08:20 GMT
  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, காரைக்காலில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்றனர்.

புதுச்சேரி: 

காரைக்கால் அருகே கீழ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் (வயது28). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் காரை க்கால் மீன்பிடி துறைமு கத்திலிருந்து, கீழ காசாகுடி மேடு பகுதியை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை, கடலில் நிலவும் தட்ப வெட்ப நிலைக்கு எதிர் மாறாக, இந்திய எல்லை யில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இலங்கைக்கு உட்பட்ட முல்லை தீவு அருகே சென்றதால், அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கீழகாசாக்குடி மேடு மீனவர்களின் விசை ப்படகை சுற்றி வளைத்தது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 12 மீனவர்க ளையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்றனர். இச்செய்தி கீழக்காசாக்குடி மேட்டை சேர்ந்த கிராம த்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News