உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை காந்திராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.


குஜிலியம்பாறையில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்கள்

Published On 2023-10-16 13:09 IST   |   Update On 2023-10-16 13:09:00 IST
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், குஜிலியம்பாறை ஒன்றியத்திலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
  • கர்ப்பகாலத்தில் பெண்கள் சத்தான உணவுகளையே உட்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நவீன பரிசோதனை கருவிகள் மூலம் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குஜிலியம்பாறை:

குஜிலியம்பாறையில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், குஜிலியம்பாறை ஒன்றியத்திலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் போசியா ரூபி தலைமை வகித்தார்.

விழாவில் காந்திராஜன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, பழம் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து காந்திராஜன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை வழங்கி பேசுகையில், ஏழை எளிய பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க பல்வேறு நலத்திட்ட ங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்ப டுத்தி வருகிறார்.

ஏழை எளிய பெண்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து சமுதாய வளை காப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை த்தொகை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், 100 கர்ப்பிணி பெண்களு க்குச் சமுதாய வளைகாப்பு நடைபெற்றுள்ளது. கர்ப்பகாலத்தில் பெண்கள் சத்தான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நவீன பரிசோதனை கருவிகள் மூலம் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டாக்டர்கள் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் குஜிலியம்பாறை ஒன்றிய ேசர்மன் சீனிவாசன், பாளையம் தி.மு.க. பேரூர் செயலாளர் கதிரவன், பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் லதா, ஒன்றிய பி.டி.ஓ. வீரகட ம்பகோபு, மருத்துவர் முத்துக்குமார், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பா ர்வையாளர்கள் விஜய லட்சுமி, சரஸ்வதி, செலவன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார ஒருங்கி ணைப்பாளர் சிவசந்திர குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News