உள்ளூர் செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

Published On 2023-05-22 08:59 GMT   |   Update On 2023-05-22 08:59 GMT
  • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
  • 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அனுமன் ஜெயந்தி, தீபா வளி, பொங்கல் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News