உள்ளூர் செய்திகள்

சிங்கனூர் பள்ளி மாணவிகளை கலெக்டர் பழனி பாராட்டிய போது எடுத்த படம்.

சிங்கனூர் அரசு பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி: விழுப்புரம் கலெக்டர் நேரில் வாழ்த்து

Published On 2023-05-14 07:19 GMT   |   Update On 2023-05-14 07:19 GMT
  • விழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், 6 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
  • பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நி லைப்பள்ளியில், 2022-2023 கல்வியாண்டில், 12-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததையொட்டி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்டகலெக்டர் பழனி நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச்சா ன்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில், 2022- 2023 கல்வியாண்டில், 12-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வில், 6 அரசுப்ப ள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற துடன், அதிகப்படியான அரசு ப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்து ள்ளனர். அந்த வகையில், சிங்கனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலை ப்பள்ளியில், 12-ம் வகுப்பு பயின்ற 38 மாணவ, மாணவிர்ள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து, சிறப்பாக பணியா ற்றிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொறுப்பு) ஹரிதாஸ், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவ சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தலைமையாசிரியர் மணிமேகலை, சிங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கன்னியம்மாள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News