உள்ளூர் செய்திகள்

அரசியல் விளக்க பேரவை கூட்டம் நடந்தது.

மா. கம்யூனிஸ்டு சார்பில் அரசியல் விளக்க பேரவை கூட்டம்

Published On 2022-12-14 10:10 GMT   |   Update On 2022-12-14 10:10 GMT
  • ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
  • மக்களின் கோரிக்கைகள் குறித்த போராட்டங்களை முன்னெடுத்து செல்வது குறித்து முக்கிய தீர்மானம்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஓன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி இன்றைய அரசியல் பற்றி விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் கேவி.ராஜேந்திரன் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் நகர மக்களின் கோரிக்கைகள் குறித்து போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்வது குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீரசேகரன், முத்துகிருஷ்ணன், வீரமணி, பெரியசாமி, ராஜேந்திரன், கவிதா, நகர குழு உறுப்பினர்கள் ரமேஷ், மந்திரமூர்த்தி, இந்திராணி, சரவணன், கவிதா உட்பட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News