செய்திகள்

சென்னை ரோகிணி திரையரங்கில் பைரவா சிறப்பு காட்சி: ரசிகர்கள் உற்சாகம்

Published On 2017-01-12 01:38 IST   |   Update On 2017-01-12 01:38:00 IST
நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னை:

'அழகிய தமிழ்மகன்' இயக்குநர் பரதன் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்து நடித்துள்ள பைரவா படம் இன்று ரலீஸாகிறது.

இதனிடையே, ரசிகர்களுக்காக பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு(சற்று முன்பு) இந்த காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.

திரையரங்கு முழுவதும் பேனர்களும், விஜய் ரசிகர் மன்ற கொடிகளும் கட்டப்பட்டு இருந்தது. தியேட்டர் வளாகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.


முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 

Similar News