செய்திகள்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்: மீண்டும் தேர்வான மாருதி டிசையர்
இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த டிசையர், இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி டிசையர் செடான் மாடல் கார் இந்திமயாவில் அதிகம் விற்பனையான பெருமையை பெற்றுள்ளது. செப்டம்பர் 2017-இல் மட்டும் டிசையர் மாடலினை 34,000க்கும் அதிகமானோர் வாங்கியுள்ளனர். இதனால் புதிய டிசையர் இந்தியாவில் ஒரே மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கடந்த மாதம் மட்டும் 31,000 டிசையர் யுனிட்கள் இந்தியாவில் விற்பனையானது. புதிய டிசையர் மாடலுக்கான தட்டுப்பாடு இந்தியாவில் அதிகரித்திருப்பதற்கு காரினை முன்பதிவு செய்து காத்திருக்கும் 40,000 பேரும் எடுத்துக்காட்டு எனலாம். அதிகப்படியான வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து குஜராத்தில் புதிய டிசையர் தயாரிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மூன்றாவது தலைமுறை டிசையர் மாடல் குடும்ப வாடிக்கையாளர்களை விட வாடகைக்கு கார் ஓட்டுபவர்களே அதிகம் முன்பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. புதிய மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து காரின் ஒட்டுமொத்த தோற்றமும் முந்தைய மாடல்களை விட அழகாக காட்சியளிக்கிறது.
வெளிப்புறம் மட்டுமின்றி உள்புற வடிவமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் காரிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. காரின் எடை குறைவாக இருப்பதால், பிக்கப் வேகம் அதிகமாவதோடு மைலேஜ் அதிகமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் AMT வசதி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி டிசையர் செடான் மாடல் கார் இந்திமயாவில் அதிகம் விற்பனையான பெருமையை பெற்றுள்ளது. செப்டம்பர் 2017-இல் மட்டும் டிசையர் மாடலினை 34,000க்கும் அதிகமானோர் வாங்கியுள்ளனர். இதனால் புதிய டிசையர் இந்தியாவில் ஒரே மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கடந்த மாதம் மட்டும் 31,000 டிசையர் யுனிட்கள் இந்தியாவில் விற்பனையானது. புதிய டிசையர் மாடலுக்கான தட்டுப்பாடு இந்தியாவில் அதிகரித்திருப்பதற்கு காரினை முன்பதிவு செய்து காத்திருக்கும் 40,000 பேரும் எடுத்துக்காட்டு எனலாம். அதிகப்படியான வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து குஜராத்தில் புதிய டிசையர் தயாரிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மூன்றாவது தலைமுறை டிசையர் மாடல் குடும்ப வாடிக்கையாளர்களை விட வாடகைக்கு கார் ஓட்டுபவர்களே அதிகம் முன்பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. புதிய மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து காரின் ஒட்டுமொத்த தோற்றமும் முந்தைய மாடல்களை விட அழகாக காட்சியளிக்கிறது.
வெளிப்புறம் மட்டுமின்றி உள்புற வடிவமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் காரிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. காரின் எடை குறைவாக இருப்பதால், பிக்கப் வேகம் அதிகமாவதோடு மைலேஜ் அதிகமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் AMT வசதி வழங்கப்படுகிறது.