செய்திகள்
டிடிவி தினகரன்

துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு - சாத்தூரில் டி.டி.வி தினகரன் பிரசாரம்

Published On 2021-04-01 10:00 GMT   |   Update On 2021-04-01 10:00 GMT
புரட்சி தலைவர் அடையாளம் காட்டிய தீயசக்திகளை ஆட்சியில் கொண்டு வந்தீர்கள் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என சாத்தூரில் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார்.

சாத்தூர்:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அவர் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-

தமிழ்நாட்டில் இப்போது நடக்கிற ஆட்சி துரோக ஆட்சி. இந்த தொகுதியில் ஒரு சண்டியர் அமைச்சர் இருக்கிறார்.

இப்போது இருக்கிறாரா? அமைச்சர் பதவிக்கு ஒரு மாண்புள்ளது. அதையெல்லாம் மறந்துவிட்டு தெரு சண்டைகாரர் மாதிரி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். சிவகாசியின் மகன் என்றார். ஆனால் சிவகாசியை விட்டு ராஜபாளைத்தில் நிற்கிறார்.

பழனிசாமி எப்படி வந்து சின்னம்மாவிடம் பதவி வாங்கினார்? என்று உங்களுக்கு தெரியும். கேட்டால் கோபம் வருது. துரோகம் பண்ணிட்டீங்க என்று சொன்னால் என் மீது வழக்கு போடுகிறார்கள்.


தெலுங்கு படத்தில் வரும் மந்திரவாதி மாதிரி ஒரு சட்டையை போட்டுகிட்டு கோவில் அரச மரங்களில் கயிறு கட்டுவதை போன்று கையில் கயிறு கட்டி கொண்டு இருக்கிறார்கள். 4 ஆண்டுகளாக போட்ட ஆட்டத்திற்கு முடிவு வந்து விட்டது. சாத்தூர் தொகுதி முதல் தமிழ்நாடு முழுவதும் இவர்களின் கதையை முடித்து விடுங்கள்.

துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்போது சந்ததி சாக்கில் ஒரு கட்சி வருகிறது. அண்ணன் வருகிறார், வெளிச்சம் தருகிறார் என்றார்கள். ஜாக்கிரதை யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளவை என்று சொல்ற மாதிரி இருக்கிறது.

கஜானாவை அண்ணன் பழனிச்சாமி சுத்தமாக காலி செய்து விட்டார். ரூ. 6 லட்சம் கோடி வரை கடன்.அனைத்து தரப்பு மக்களும் தவியாய் தவிக்கிறார்கள். இவங்க பின்னாடி 50 பேர் பினாமிகள். அவர்களை வைத்து ஆட்சி நடத்ததுகிறார்.

நாடு தாங்குமா, கடவுளுக்கு பொறுக்குமா? மக்கள் வரி பணம் எங்கு சென்றாலும் மக்களிடமே வரும். புரட்சி தலைவர் அடையாளம் காட்டிய தீயசக்திகளை ஆட்சியில் கொண்டு வந்தீர்கள் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News