ஐ.பி.எல்.(IPL)
வழக்கு பதிவு

தேர்தல் விதிமீறல்: அதிமுக வேட்பாளர் வைகை செல்வன் மீது வழக்கு

Published On 2021-03-18 14:39 IST   |   Update On 2021-03-18 14:39:00 IST
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் இரவு 10 மணிக்கு மேல் வாக்கு சேகரித்ததாக வைகை செல்வன் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன், ஆர். ஆர். நகர், பொம்மையபுரம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் இரவு 10 மணிக்கு மேல் அவர் வாக்கு சேகரித்ததாக வச்சக்காரப்பட்டி போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News