செய்திகள்
திருவண்ணாமலை தொகுதி

திமுக-வின் கோட்டையாக விளங்கும் திருவண்ணாமலை தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-12 12:43 GMT   |   Update On 2021-03-12 12:43 GMT
அதிமுக இதுவரை வெற்றியை கண்டிராத தொகுதியாக இருக்கும் திருவண்ணாமலை ஓர் கண்ணோட்டம்
தமிழகத்தில் தலைசிறந்த ஆன்மீக நகரமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தியளிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இங்கு மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள கிரிவலப் பாதையில் ரமணர், சேஷாத்திரி, யோகி ராம்சுரத்குமார் ஆகிய மகான்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும் இடைக்காடர், குகை நமச்சிவாயர், மூக்குப்பொடி சித்தர் உள்ளிட்ட பல்வேறு சித்தர் சன்னதிகளும் உள்ளன.



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி தினங்களிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் இதன் மூலம் வியாபாரிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் செங்கம் தாலுகாவில் மேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கம், ராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சேர்ப்பாட்டு, சே.கூடலூர், வரகூர், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூர், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்ற்ம் எடக்கல் கிராமங்கள் வருகிறது.



சு.பள்ளியம்பட்டு, மலப்பாம்பாடி, துர்க்கை நம்மியாந்தல், வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, கோசாலை, நொச்சிமலை, வாணியந்தாங்கல், சோ.கீழ்நாச்சிப்பட்டு, சின்னகாங்கேயனூர், சம்மந்தனூர், நல்லான்பிள்ளை பெட்றான், பள்ளிக்கொண்டாப்பட்டு, கீழ்நாத்தூர், மேலதிக்கான், கீழணைக்கரை, சமுத்திரம், அணைபிறந்தான்,

அத்தியாந்தல், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தாம்பூண்டி, மேல்செட்டிப்பட்டு, கீழ்செட்டிப்பட்டு, நல்லவள்பாளையம், சாவல்பூண்டி, மேல்புத்டியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல், உடையானந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, அரசுடையாம்பட்டு, மஞ்சம்பூண்டி, விஸ்வந்தாங்கல், மெய்யூர், நச்சனந்தல், கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு,



காட்டாம்பூண்டி பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சகக்ரதாமடை, தலையாம்பள்ளம், சு.பாப்பாம்பாடி, தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, அத்திப்பாடி, பழையனூர், கண்டியன்குப்பம், வளையம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அப்புப்பட்டு, பவித்திரம், பெஇர்யகல்லப்பாடி மற்றும் சின்னகல்லப்பாடு கிராமங்கள் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி பகுதிகள் இந்த திருவண்ணாமலை தொகுதியில் அடங்கியுள்ளன.

இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 851பேர் உள்ளனர். இதில் ஆண்வாக்காளர்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 856 .பெண்வாக்காளர் கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 956. மூன்றாம் பாலினத்தவர் 39 பேர்.



திருவண்ணாமலை தொகுதியில் முக்கிய நகரமாக திருவண்ணாமலை நகரம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை ஒன்றியத்தில் 59 பஞ்சாயத்துகள் உள்ளன. திருவண்ணாமலை தொகுதியில் முதலியார் மற்றும் வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் யாதவர், ரெட்டியார், நாயுடு, ஆதி திராவிடர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. 8 முறை வெற்றி பெற்றுள்ளது. 

கடந்த 29 ஆண்டுகளாக தி.மு.க.வை எந்த கட்சியும் வெல்ல முடியவில்லை. அதற்கு முன்னர் காங்கிரஸ் 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. இங்கு ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை.

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு எந்த கட்சியும் தீர்வு காணவில்லை. திருவண்ணாமலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இப்பணியை முடித்தால் ஓரளவு போக்குவரத்து நெருக்கடி குறையும். மேலும் புறவழிச்சாலை பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. திருவண்ணாமலை பஸ் நிலையம் கட்டிடம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. மூன்று முறை இடிந்து விழுந்தும் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.



திருவண்ணாமலை தொகுதியில் பால் உற்பத்தி அதிகளவில் உள்ளது. மேலும் மலர் சாகுபடியும் அதிக அளவில் உள்ளது. அவைகளைப் பதப்படுத்தி சந்தைப் படுத்தினால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே பால் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

இந்த தொகுதியில் டான்காப் மூலம் தொடங்கப்பட்ட கடலை எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. பின்னர் அது மூடப்பட்டுவிட்டது. அதனை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை தொகுதியில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் தொழிலாளர்கள் பலர் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். சென்னை, பெங்களூர் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வேலை பார்க்கின்றனர். மேலும் திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு சென்று ஸ்பின்னிங் மில்களில் வேலை பார்க்கின்றனர். மேலும் பலர் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் ஏற்படுத்தினால் மக்களின் வருமானத்திற்கு வழி பிறக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள எ.வ. வேலுவிற்கு திமுக மீண்டும் சீட் வழங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றி



1951- ராமச்சந்திர ரெட்டியார்- காங்கிரஸ்
1957- பி.யு.சண்முகம்- சுயேட்சை
1962- பி.பழனிபிள்ளை- காங்கிரஸ்
1967- விஜயராசு- காங்கிரஸ்
1971- பி.யு.சண்முகம்- தி.மு.க.
1977- பி.யு.சண்முகம்- தி.மு.க.
1980- நாராயணசாமி- காங்கிரஸ்
1984- ரவீந்திரன்- காங்கிரஸ்
1989- பிச்சாண்டி- தி.மு.க.
1991- கண்ணன்- காங்கிரஸ்
1996- பிச்சாண்டி- தி.மு.க.
2001- பிச்சாண்டி- தி.மு.க.
2006- பிச்சாண்டி- தி.மு.க.
2011- எ.வ.வேலு- தி.மு.க.
2016- எ.வ.வேலு- தி.மு.க.
Tags:    

Similar News