ஐ.பி.எல்.(IPL)
புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி
ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ், பா.ஜனதா, அதிமுக ஆகியவை ஒன்றிணைந்து புதுச்சேரி தேர்தலை சந்திக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுடன் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்திலும் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற 12-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதிகளை கேட்டு வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் இடம்பிடிப்பது இன்று உறுதியானது. அப்போது ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் கொடுப்பதும், மற்ற தொதிகளை கூட்டணி கட்சிகள் பிரித்துக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டது.
பா.ம.க.வுடன் பா.ஜனதாவும், அதிமுக-வும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக பா.ம.க. அறிவித்துள்ளது.
கூட்டணியில் ஐந்து தொகுதிகள் கேட்ட நிலையில், தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாததால் பாமக இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.