செய்திகள்
காதர் மொய்தீன்

கடையநல்லூர் தொகுதி உறுதியானது- காதர் மொய்தீன்

Published On 2021-03-09 07:09 GMT   |   Update On 2021-03-09 07:09 GMT
திருவாடானை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், சென்னையில் ஒரு தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஏதாவது 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியதாக காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
சென்னை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

பொதுவாக வேட்பாளரை மனதில் வைத்து தான் தொகுதிகளை கேட்பது வழக்கம். நாங்கள் திருவாடானை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், சென்னையில் ஒரு தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஏதாவது 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரினோம்.

ஆனால் அவர்கள் திருவாடானை, திருச்சி கிழக்கு, சென்னை தொகுதிகளை தர முடியாது என்று கூறி விட்டார்கள். கடையநல்லூர் தொகுதியை எங்களுக்கு ஒதுக்கி உள்ளார்கள். அந்த ஒரு தொகுதி மட்டும் உறுதியாகி உள்ளது.

மீதம் உள்ள 2 தொகுதிகளில் சிதம்பரம் அல்லது பாபநாசம், ஆம்பூர் அல்லது வாணியம்பாடி ஆகிய தொகுதிகளை கேட்டுள்ளோம். கட்சி தலைவருடன் கலந்துபேசி இன்று மாலை 5 மணிக்கு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள். இன்று மாலை நடக்கும் பேச்சுவார்த்தையின் போது இதில் எந்த தொகுதிகள் என்பது முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News