செய்திகள்
சிடி ரவி

சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி

Published On 2021-03-03 08:27 GMT   |   Update On 2021-03-03 08:27 GMT
சசிகலா, தினகரனை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.
சென்னை:

பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

* நாங்கள் அரசியல் மட்டும் செய்யவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம்.

* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்தி வருகிறோம்.

* சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவு எடுக்க வேண்டும்.

* சசிகலா, தினகரனின் அரசியல் பலம் மற்றும் பலவீனம் பற்றி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரியும். 2 பேரையும் சேர்ப்பது பற்றி அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News