செய்திகள்

ராயபுரம் தொகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

Published On 2016-04-09 10:09 GMT   |   Update On 2016-04-09 10:10 GMT
ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இன்று காலை அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

சென்னை:

ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் உள்ள லோட்டஸ் ராமசாமி தெருவில் இன்று காலை அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. டி.ஜெயக்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 49–வது வட்டத் தில் உள்ள சஞ்சீவ ராயன் கோவி லில் டி.ஜெயக்குமார் சாமி கும்பிட்டு விட்டு ஓட்டு சேகரிப் பில் ஈடு பட்டார். சஞ்சீவராயன் கோவில் தெரு, பாலு முதலி தெரு, வெங்கடாச்சலம் தெரு, பண்டலை சாலை, ஜி.ஏ.ரோடு, தாண்டவராயர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுசேகரித்தார்.

ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை கொடுத்து ஆதரவு திரட்டினார். பகுதி செயலாளர் சி.பி.ராமஜெயம், மண்டல குழு தலைவர், இரா.பழனி மற்றும் மாவட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Similar News