செய்திகள்

ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வை அனுமதித்து இருக்கமாட்டார் - தனியரசு

Published On 2018-07-03 10:26 IST   |   Update On 2018-07-03 10:26:00 IST
ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வை அனுமதித்து இருக்கமாட்டார் என்று தனியரசு எம்.எல்.ஏ. நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Jayalalitha

கரூர்:

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. கரூரில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் அவசியம் தேவை. சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கக்கூடிய விவசாயிகளின் நிலம், மற்றும் வீடுகளுக்கு சந்தை மதிப்பை விட 4 மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.

பாதிக்கப்படும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாற்று இடம் போன்றவற்றினை உறுதி செய்த பின்னர் நிலத்தை அளந்து எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக நிலத்தை அளப்பது, எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மக்களுடம் இணைந்து கொங்கு இளைஞர் பேரவை போராடும். அந்த வகையில் சாலையே வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் நிராகரிக்ககூடாது.

 


மத்திய மோடி அரசு தங்களின் ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னரை வைத்து கொண்டு உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அந்த வகையில் மாநில சுயாட்சியை காக்கும் வகையில் தமிழக கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை வரவேற்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவே இதற்கு காரணமாகிவிட்டது.

கவர்னர் ஆய்வினை எதிர்க்க முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு உள்ளூர எண்ணம் உள்ளது. சட்டசபையில் தாங்கள் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் இதில் ஒரு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வு செய்ய அனுமதித்து இருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். #Jayalalitha

Tags:    

Similar News