செய்திகள்
காவிரி உரிமை மீட்பு பயணம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்- முத்தரசன்
காவிரி உரிமை மீட்பு நடைபயணம் அரசியல் மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
சீர்காழி:
காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தின் 6-வது நாளான இன்று வைத்தீஸ்வரன் கோவிலில் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி உரிமை மீட்பு நடைபயணம் திருச்சி முக்கொம்பில் தொடங்கிய நாள் முதல் வழி நெடுங்களிலும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த நடைபயணம் பொதுமக்களிடையே தன்னெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் ரீதியாக மத்திய அரசை வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியின் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும். காவிரி உரிமை மீட்பு நடைபயணம் அரசியல் மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.
தமிழகம் தற்போது கடுமையான கடனில் சிக்கி பின் தங்கியுள்ளது. எனவே அரசியல் மாற்ற ஏற்பட வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் மாநில உரிமையை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுத்து இருக்கமாட்டார். ஆனால் அம்மா பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் தெரிந்தே உரிமையை விட்டு கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue
காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தின் 6-வது நாளான இன்று வைத்தீஸ்வரன் கோவிலில் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி உரிமை மீட்பு நடைபயணம் திருச்சி முக்கொம்பில் தொடங்கிய நாள் முதல் வழி நெடுங்களிலும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த நடைபயணம் பொதுமக்களிடையே தன்னெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் ரீதியாக மத்திய அரசை வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியின் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும். காவிரி உரிமை மீட்பு நடைபயணம் அரசியல் மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.
தமிழகம் தற்போது கடுமையான கடனில் சிக்கி பின் தங்கியுள்ளது. எனவே அரசியல் மாற்ற ஏற்பட வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் மாநில உரிமையை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுத்து இருக்கமாட்டார். ஆனால் அம்மா பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் தெரிந்தே உரிமையை விட்டு கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue