செய்திகள்
மு.க.ஸ்டாலினும், தினகரனும் பின்னி பிணைந்து இருக்கிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்
தினகரனும், மு.க.ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆலந்தூர்:
அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் சந்தித்து டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன என்று கருத்து கேட்டார்கள்.
அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “மத்திய - மாநில அரசுகள் இடையே பல பரிவர்த்தனைகள் நடைபெறும். அது தொடர்பான அரசு முறை பயணமாக செல்கிறேன்” என்றார்.
அரசுக்கு எதிராக நெருக்கடி கொடுத்து வரும் தினகரன், மு.க.ஸ்டாலின் பற்றி கேட்டற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், “தினகரனும், மு.க.ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள், அது மக்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.
அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் சந்தித்து டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன என்று கருத்து கேட்டார்கள்.
அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “மத்திய - மாநில அரசுகள் இடையே பல பரிவர்த்தனைகள் நடைபெறும். அது தொடர்பான அரசு முறை பயணமாக செல்கிறேன்” என்றார்.
அரசுக்கு எதிராக நெருக்கடி கொடுத்து வரும் தினகரன், மு.க.ஸ்டாலின் பற்றி கேட்டற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், “தினகரனும், மு.க.ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள், அது மக்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.