செய்திகள்
தினகரன் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: அருண்மொழித்தேவன் எம்.பி. பேட்டி
கட்சியிலும் ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தினகரன் மனநல மருத்துவரை பார்த்து ஆலோசனை பெற வேண்டும் என அருண்மொழித்தேவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கடலூர்:
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு அளிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,
அருண்மொழித்தேவன் எம்.பி. பேசியதாவது:
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் தற்போது இணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. இந்த சூழ்நிலையில் ஆட்சியிலும் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தினகரன் அத்துமீறி செயல்படுகிறார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை தினகரன் நீக்கி வருகிறார். நானே ராஜா நானே மந்திரி என்ற ரீதியில் செயல்பட்டு வரும் அவர் நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 தாண்டாது. மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி பதவி தருவதாகவும் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறுகிறார். ஆனால், யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம். எம்.எல்.ஏ. முருகுமாறன் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவருகின்றன.
கட்சியின் பொதுச்செயலாளர் விஷயத்தில், அன்றைய சூழ்நிலையில் சசிகலாவை ஆதரித்தோம். இல்லை என்று சொல்லவில்லை. அதை தினகரன் இப்போது சொல்லிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. சசிகலா, அம்மாவைப் போல் தன்னை நினைத்துக்கொண்டு முதலமைச்சராக நினைத்தார். அந்த முடிவை அவர் எடுத்தபோது அவரது சுயரூபம் தெரிந்துவிட்டது.
அவர் ஏதோ எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது போல் பேசுகிறார். மக்களை சந்தித்து வாக்கு கேட்டு, முதலமைச்சர் ஆக்கியதுபோல் அவரும் அவரது குடும்பத்தினரும் சொல்கின்றனர். அவர் சிறைக்கு செல்ல நேரிட்டதால், வேறு வழியில்லாமல், யாரையாவது முதலமைச்சர் ஆக்கவேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கினார்.
இப்போது, சாதி அரசியலை முன்னிலைப்படுத்துவதற்காக தனபாலை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று கட்சியில் அம்மாவால் நீக்கப்பட்ட, மீண்டும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படாத திவாகரன் சொல்கிறார். இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கட்சி நிர்வாகிகளை தினகரன் தொடர்ந்து நீக்கி வருகிறார். அதுவும் சசிகலாவிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு நீக்குவதாக சொல்கிறார். இது கேலிக்கூத்தாக உள்ளது. மக்கள் பணியாற்றுவதற்கு கட்சியையும் ஆட்சியையும் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு அளிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,
அருண்மொழித்தேவன் எம்.பி. பேசியதாவது:
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் தற்போது இணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. இந்த சூழ்நிலையில் ஆட்சியிலும் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தினகரன் அத்துமீறி செயல்படுகிறார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை தினகரன் நீக்கி வருகிறார். நானே ராஜா நானே மந்திரி என்ற ரீதியில் செயல்பட்டு வரும் அவர் நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 தாண்டாது. மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி பதவி தருவதாகவும் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறுகிறார். ஆனால், யாரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம். எம்.எல்.ஏ. முருகுமாறன் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வெளிவருகின்றன.
கட்சியின் பொதுச்செயலாளர் விஷயத்தில், அன்றைய சூழ்நிலையில் சசிகலாவை ஆதரித்தோம். இல்லை என்று சொல்லவில்லை. அதை தினகரன் இப்போது சொல்லிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. சசிகலா, அம்மாவைப் போல் தன்னை நினைத்துக்கொண்டு முதலமைச்சராக நினைத்தார். அந்த முடிவை அவர் எடுத்தபோது அவரது சுயரூபம் தெரிந்துவிட்டது.
அவர் ஏதோ எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது போல் பேசுகிறார். மக்களை சந்தித்து வாக்கு கேட்டு, முதலமைச்சர் ஆக்கியதுபோல் அவரும் அவரது குடும்பத்தினரும் சொல்கின்றனர். அவர் சிறைக்கு செல்ல நேரிட்டதால், வேறு வழியில்லாமல், யாரையாவது முதலமைச்சர் ஆக்கவேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கினார்.
இப்போது, சாதி அரசியலை முன்னிலைப்படுத்துவதற்காக தனபாலை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று கட்சியில் அம்மாவால் நீக்கப்பட்ட, மீண்டும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படாத திவாகரன் சொல்கிறார். இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கட்சி நிர்வாகிகளை தினகரன் தொடர்ந்து நீக்கி வருகிறார். அதுவும் சசிகலாவிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு நீக்குவதாக சொல்கிறார். இது கேலிக்கூத்தாக உள்ளது. மக்கள் பணியாற்றுவதற்கு கட்சியையும் ஆட்சியையும் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.