செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தேதி திங்கட்கிழமை வெளியாகும்?

Published On 2016-09-17 05:54 GMT   |   Update On 2016-09-17 10:27 GMT
உள்ளாட்சி தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படும் என்பதற்கான அறிவிப்பு, வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என்று தெரிகிறது. இந்த தகவலை அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்து வருகிறது.

இதற்காக சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரித்து சரிபார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ளது.

புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பம் செய்திருந்தால் அவர்களுக்காக துணை வாக்காளர் பட்டியலை வெளியிடவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் செலவுக்காக அரசு ரூ.183 கோடியை ஒதுக்கி உள்ளது. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படும் என்பதற்கான அறிவிப்பு, வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என்று தெரிகிறது. இந்த தகவலை அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.

Similar News