இளங்கோவன் ராஜினாமா: ப.சிதம்பரம் கருத்து
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் உழைப்பு கடுமையான உழைப்பு தான். ஆனால் காங்கிரஸ் கட்சியின் உழைப்பு, வாக்கு இல்லாமல் அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று அவர்களுக்கே தெரியும். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் என்று கூறுவது சம்ராதய பேச்சு. அரசியல் கட்சிக்கு வெற்றி தான் முக்கியம்.
காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் வலிமையாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் அவ்வாறு இல்லை என்றால் அது கட்சியின் குறை அல்ல. அது கட்சியை வழி நடத்துபவர்களின் குறை.
கட்சி தோழர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச வேண்டும். விவாதங்கள் செய்ய வேண்டும். விவாதங்கள் நடந்தால் தான் அரசியல்.
இவ்வாறு அவர் கூறினார்.