லைஃப்ஸ்டைல்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

இந்த நோய் தான் பெண்களை அதிகளவில் தாக்குகிறது

Published On 2021-06-08 08:26 GMT   |   Update On 2021-06-08 08:26 GMT
இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும்.
மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களை அதிகமாக தாக்கும் நோய் பட்டியலில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இடம் பிடித்துள்ளது. வாழ்நாளில் 53 பேரில் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பப்பையில் உள்ள செல்கள் அபரிமிதமாக வளர ஆரம்பிப்பது புற்றுநோய்க்கு காரணமாகிவிடுகிறது.

இந்த புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிந்துவிட்டால் மற்ற புற்றுநோய் வகைகளை போல் அல்லாமல் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை.

இதுகுறித்து மருத்துவர் இந்தர் மயூரா கூறுகையில், ‘‘இந்தியாவில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக அளவில் இந்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சரியான நேரத்தில் பரிசோதனை, தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்தவகை புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 97 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய்
புற்றுநோய்
பாதிப்புக்கு ஆளாகிறார்கள்’’ என்கிறார்.

இடுப்பு வலி, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல், உடலுறவின்போது அல்லது அதற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதல் உள்ளிட்டவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களாகும். இந்த வகை புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. எச்.பி.வி தடுப்பூசியும் நிவாரணம் தரும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அவ்வப்போது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
Tags:    

Similar News