லைஃப்ஸ்டைல்
கட்டிப்பிடி வைத்தியம்

தாம்பத்தியத்தை உச்சம் அடைய செய்யும் கட்டிப்பிடி வைத்தியம்

Published On 2020-07-27 06:51 GMT   |   Update On 2020-07-27 06:51 GMT
தம்பதியரிடையே விரிசல் ஏற்பட்டால் அதை சரிசெய்யும் அளவுக்கு வீரியம் நிறைந்த மருந்தாக தாம்பத்திய வாழ்க்கை இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்கான மருந்தை அனுபவித்து, ரசித்து ருசிக்கத்தான் பல தம்பதிகளுக்கு தெரிவதில்லை.
கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படாத அளவுக்கு, இயற்கை தரும் மருந்தாக அமைந்திருப்பது தாம்பத்தியம். தம்பதியரிடையே விரிசல் ஏற்பட்டால் அதை சரிசெய்யும் அளவுக்கு வீரியம் நிறைந்த மருந்தாகவும் இது இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்கான மருந்தை அனுபவித்து, ரசித்து ருசிக்கத்தான் பல தம்பதிகளுக்கு தெரிவதில்லை. பெரும்பாலான தம்பதிகள், தாம்பத்தியத்தை ஆனந்தத்துடன் அணுகாமல் சம்பிரதாயத்துக்காக, இயந்திரத்தனமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தம்பதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தாம்பத்திய உண்மைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்..

தம்பதிகள் அவ்வப்போது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க, உடல் அழகு அவசியமா? என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். திருமணமான தொடக்கத்தில்தான் அழகுக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நாட்கள் செல்லச்செல்ல படுக்கை அறையில் கணவனும்-மனைவியும் எவ்வளவு மகிழ்ச்சியாக இணைகிறார்கள், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஈர்த்து எவ்வாறு இணக்கமாக செயல்படுகிறார்கள், ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு எப்படி திருப்திபடுத்துகிறார்கள் என்பதுதான் தாம்பத்தியத்தை வெற்றியாக்கும். அந்த வெற்றித் தருணங்களில் அழகு என்ற பேச்சே அடிபட்டுபோகிறது.

இதை இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், அழகே இல்லாத பெண்களால் சில ஆண்கள் ஈர்க்கப்பட்டிருப்பதை உங்கள் அனுபவத்திலே கண்டிருப்பீர்கள். அதுபோல் அழகற்ற ஆண்களை அழகான பெண்கள் வளைய வருவதையும் காணலாம். அன்பும், அணுகுமுறையும், ஆனந்தமான செயல்பாடுகளுமே தாம்பத்தியத்தை சிறப்பாக்கும்.

தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களில் முப்பது சதவீத பெண்களே, ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உச்சகட்ட இன்பத்தை அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே நேரம், வாழ்க்கையில் ஒருமுறை கூட உச்சம் அடையாத பெண்களும் இருப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. இது ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம்.

திருமணமாகும் பெண்கள் முதல் முறையாக உறவு கொள்ளும்போது, கன்னி சவ்வு எனப்படும் ‘ஹைமன்’ கிழிந்து லேசாக இஇரத்த ம் வரும் என்றும், அதனால் வலி ஏற்படும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது தாங்கமுடியாத வலியாக இருப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ‘ஹைமன்’ கன்னித் தன்மையின் அடையாளம் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சவ்வு முதல் உறவில்தான் கிழிபட வேண்டும் என்பதும் இல்லை. பிறவியிலே அந்த சவ்வு இல்லாத பெண்களும் நிறைய இருக்கிறார்கள். விளையாட்டு, உடலை வளைக்கும் பயிற்சிகளால் கூட அந்த சவ்வு கிழிபடுவது உண்டு.

மார்பகங்களை பற்றிய சந்தேகங்கள் பெண்களுக்கு நிறைய இருக்கின்றன. அதன் வடிவமும், அமைப்பும் பெண்ணுக்கு பெண் மாறுபடும். பாரம்பரியம், கொழுப்பு திசுக்களின் சேர்க்கை, ஹார்மோன்கள் போன்றவற்றின் அடிப்படையில் மார்பகங்களின் வடிவம் அமையும். சிலருக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்காது. லேசான வித்தியாசம் இருந்துகொண்டிருக்கும்.

மனைவியை கணவனும், கணவனை மனைவியும் அதிக நேரம் கட்டிப்பிடித்தால், அவர்களது தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக அமையும் என்பதை சில ஆய்வுகள் உண்மைதான் என்கின்றன. 20 நிமிடங்கள் மனைவியை கட்டிப்பிடித்தால், அவளது உடலில் ‘ஆக்சிடோசின்’ என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். அது பெண்ணுக்கு அதிக உற்சாகத்தையும், சக்தியையும் தரும். அது போன்ற மாற்றங்கள் ஆணுக்கும் நிகழும். அவ்வப்போது கட்டிப்பிடித்து மகிழும் தம்பதிகளுக்குள் மனநெருக்கம் அதிகமாகும். அதுவே உடல் நெருக்கத்தையும் சிறப்பாக்கும். அதனால் கட்டிப்பிடிப்பதை கணவனும்-மனைவியும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
Tags:    

Similar News