லைஃப்ஸ்டைல்
பிரசவத்துக்கு பிறகு இரத்தப்போக்கு... பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

பிரசவத்துக்கு பிறகு இரத்தப்போக்கு... பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2020-06-16 05:18 GMT   |   Update On 2020-06-16 05:18 GMT
கர்ப்பக்காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துகொள்வதும் முக்கியம். இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும்.
பிரசவம் முடிந்த பிறகு உண்டாகும் இரத்தப்போக்கும் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவித அசெளகரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டாவதுதான். ஆனால் இவை தற்காலிகமானதே என்பதால் பாதுகாப்பாக அவற்றைக் கடக்க சுகாதார முறைகளைப் பின்பற்றினால் போதுமானது. என்ன என்றுதான் தெரிந்துகொள்ளுங்கள்.

பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தொடர்ந்து நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் நின்றுவிடும். சில ருக்கு ஆறுவாரங்கள் வரையிலும் ரத்த போக்கு இருக்கும். இது நார்மலான விஷயம்தான். சுகப்பிரச வம் ஆனவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு அப்போதே கருப்பையையும் சுத்தம் செய்துவிடுவதால் இவர்களுக்கு ரத்த போக்கு குறைவாக இருக்கும்.

இரத்தபோக்கு தொடர்ந்து இருக்காமல் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப அவ்வபோது உண்டாகும். இதனால் திடீரென்று ரத்த போக்கும் பிறகு ரத்த போக்கு இல்லாமல் போவதும் என்று மாறி மாறி நிகழும். இவையெல்லாம் நார்மல் தான்.

மாதவிடாய் காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கை விட நான்கு மடங்கு இரத்தப்போக்கு அதிக ரிக்கும் போது கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. சில நேரங்களில் கருப்பை யின் நஞ்சுக்கொடியின் சிறு துகள் ஒட்டியிருந்தாலும், தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிக ரத்தப் போக்கு உண்டாகும்.

அதனால் அதிகமாக உதிரப்போக்கு உண்டாகும் போது அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானது. அதிக இரத்த போக்கு அதிகநாட்கள் தொடர்ந்தால் கண்டிப்பாக அலட்சியப்படுத்த கூடாது. அதே போன்று இரத்தப்போக்கு பழுப்பு நிறத்தில் கசிவு உண்டாகும். இது எந்த வித பாதிப்பையும் உண்டாக்காது ஆனால் இரத்தப்போக்கு நார்மலாக இருந்தாலும் கசிவின் போது துர்நாற்றம் வெளிப்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உதிரப்போக்கு ஏற்படும் போது தொற்று ஏற்படாமல் பார்த்துகொள்வது அவசியம். பிறப்புறுப்பில் பாதிப்பில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிலும் குழந்தை பிறந்த 10 நாட்கள் கூடுதல் கவ னத்தோடு இருக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரத்தப்போக்கை பொறுத்து 4 அல்லது 5 தரமான காட்டன் நாப்கின்கள் வரை மாற்றுவது பாதுகாப்பானது.

கர்ப்பக்காலத்தில் சேமித்த நீர் மற்றும் தாது உப்புகள் சிறுநீர் பையில் தேங்கியிருக்கும். இது பிரசவித்ததும் சிறுநீராக வெளியேறும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் நாப்கினை மாற்றுவது நல்லது.

ஒவ்வொரு முறை நாப்கின்மாற்றும் போதும் மிதமான வெந்நீரில் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவி பிறகு நாப்கின் மாற்றுங்கள். இதனால் அந்த இடத்தில் இருக்கும் ஒருவித எரிச்சல், வலி உணர்வு விரைவில் ஆறக்கூடும். மேலும் அதிகபட்சமாக மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற் றுங்கள். இரவு நேரங்களில் இரண்டு முறையாவது மாற்றிவிடுங்கள். இது தொற்றுகளிலிருந்து உங்க ளைக் காப்பாற்றும்.

சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பை சுத்தமாக நோய்த்தொற்றில் லாமல் வைத்திருக்க வேண்டும். பிறப்புறுப்பில் தையல் இடப்பட்டிருந்தால் (இப்போது நவீன மருத்து வத்தில் அவை வலியையும் எரிச்சலையும் உண்டாக்குவதில்லை) நீங்கள் கவனமாக பராமரிக்க வேண்டும்.

முதலில் மலச்சிக்கல் பிரச்சனையின்றி பார்த்துக்கொள்வது நல்லது. முதல் நான்கு நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு மருத்துவரே மருந்துகளையும் மலச்சிக்கல் பிரச்சனைகளை இயல்பாக தீர்க்கும் உணவுகளையும் பரிந்துரைப்பார். அதன்படி உணவுவகைகளை எடுத்துகொள்வதையும் தவிர்க்க கூடாது.

மருத்துவரின் பரிந்துரையோடு கிருமி நாசினி(டெட்டால் போன்று) கலந்த நீரில் சுத்தம் செய்வது நல்லது. அதே போன்று சுத்தம் செய்யும் போது எப்போதும் முன்பிருந்து பின்பாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தொற்று பரவ வாய்ப்புல்லது. அதே போன்று குழந்தையை தூக்கும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகு தூக்குவது நல்லது.

பிரசவக்காலத்தில் ஏற்கனவே அதிகப்படியான இரத்தப்போக்கு உண்டாகியிருக்கும். பிரசவக்காலத் துக்கு பிறகும் இரத்தப்போக்கு தொடரும். அதனால் உடலில் போதுமான அளவு சத்தும் வலுவும் குறையத் தொடங்கியிருக்கும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுப்பதால் அதிகளவு ஊட்டச்சத்தை பிரசவித்த பெண் பெற வேண்டும்.

மருத்துவர் பரிந்துரையின் பேரில் சத்து மிக்க உணவை கண்டிப்பாக எடுத்துகொள்ள வேண்டும். அரிசி உணவை 30 சதவீதமும் காய்கறிகளை 30 சதவீதமும், கீரை வகைகளை 20 சதவீதமும், அசை வம் சாப்பிடுபவர்களாக இருந்தால் 20 சதவீதம் அசைவ உணவையும் திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். இவற்றில் குழந்தையின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

மேலும் தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் பூண்டு, பால், பச்சை வேர்க்கடலை போன்றவற்றையும் எடுத்துகொள்ள வேண்டும். தினமும் பாலில் 5 பல் பூண்டை தட்டி போட்டு பாலில் கொதிக்க வைத்து குடித்துவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

கர்ப்பக்காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துகொள்வதும் முக்கியம். இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும்.
Tags:    

Similar News