லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் என்னாகும்?

கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் என்னாகும்?

Published On 2020-04-25 04:45 GMT   |   Update On 2020-04-25 04:45 GMT
கர்ப்பிணிகள் பப்பாளி பழங்களைத் தொடவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்கப் போகும் பெண்களின் வாழ்வில் இந்த விசயம் கண்டிப்பாக நடந்திருக்கும். ‘எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது.’ என்ற பயமுறுத்தும் வார்த்தைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் கடந்திருக்காமல் இருக்கவே முடியாது.

இதற்கு என்ன காரணம்? ஏன் பப்பாளி பழங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தி பரவத் தொடங்கியது என்று பார்க்கலாமா? இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பப்பாளி பழங்களைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று நம்பப்பட்டது தான்.

கர்ப்பிணிகள் பப்பாளி பழங்களைத் தொடவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கண்மூடித்தனமாக நாம் பப்பாளி பழங்களைக் கர்ப்பத்திற்கு எதிரானவையாகக் கருதக்கூடாது. உண்மையில் நன்கு கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதே சமயம் சற்றுப் பச்சை தன்மையோடு சரியாகக் கனியாத பதத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்.

உண்மையில் நம் நாட்டில் குழந்தை இறப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! அந்த வகையில் கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன. அதனால் பழைய கட்டுப்பாடுகளையே நம்பிக் கொண்டு நல்ல சத்தான உணவைத் தவிர்ப்பது உகந்ததல்ல.

ச்சை தன்மை கொண்ட பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளில் பெப்சின் காணப்படும். இந்தப் பெப்சின் கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக உணவின் மீது ஏற்படும் ஒவ்வாமையை மேலும் அதிகரிக்கச் செய்து விடும். இதனால் அவர்களுக்கு வாந்தி ஏற்படலாம். அதனால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டாம்.

இந்த பெப்சின் கர்ப்பப்பையின் தோலை தாக்கும் தன்மை கொண்டது. அதனால் கருப்பையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடும்.குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இந்த பெப்சின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் தன்மை கொண்டது. அதிக அளவு பெப்சியில் உடலில் சேரும் பொழுது குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
Tags:    

Similar News